வீடுவீடாக சென்று தடுப்பூசி பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்

 

வீடுவீடாக சென்று தடுப்பூசி பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்

தனது தொகுதியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துமாறு உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Image

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வி.ஆர் பிள்ளை தெரு, கேனல் சாலை, முத்தையா தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்களை தொடங்கி வைத்தார். பின்னர் திருவல்லிக்கேணி பகுதிகளில் காலிங்கராயன் தெரு, வெங்கட் ராமன் தெரு, லாய்ட்ஸ் காலனி போன்ற பகுதிகளில் வீடு வீடாக சென்ற உதயநிதி, தடுப்பூசி போட்டு கொண்டீர்களா? போட்டு கொள்வதற்கு என்ன தயக்கம்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.

ராயப்பேட்டை பகுதியில் தொற்று பாதிப்பின் காரணமாக தனிமையில் இருக்கும் நபர்களை அணுகி உடல் நலன் குறித்து விசாரித்த உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சி ஊழியர்கள் சார்பில் உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றனவா? என வினவினார்.