மோடியே உங்கள கும்புடு போட நான் எடப்பாடி பழனிசாமி இல்ல; கலைஞர் பேரன் – உதயநிதி ஸ்டாலின்
Apr 2, 2021, 05:01 IST1617319860000
தாராபுரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், “மோடியே குறுக்குவழியில் வந்தவர். ஜஸ்வந்த் சிங்கா என்பவர் மோடியின் தொல்லை தாங்காமல் வேறு கட்சியில் சென்று இணைந்துவிட்டார். சுஷ்மா ஸ்வராஜ் என ஒருவர் இருந்தார் அவர் மோடி தொல்லையால் இறந்தே விட்டார். அருண் ஜெட்லியும், மோடியின் தொல்லை தாங்காமல் இறந்துவிட்டார். வெங்கைய நாயுடுவை ஒதுக்கிவைத்தவர் மோடி. இப்படி பல பேரை ஒதுக்கிவைத்துவிட்டு பதவியில் இருப்பவர்தான் மோடி
நான் குறுக்கு வழியில் வந்தவன் என்று கூறுகிறார். நானா குறுக்கு வழியில் வந்தவன். மோடி அவர்களே உங்களை பார்த்து நான் பயப்பட மாட்டேன். பிரதமர் மோடியை பார்த்து கும்பிடு போட நான் ஒன்னும் பழனிசாமி இல்லை.. நான் உதயநிதி ஸ்டாலின், கலைஞரின் பேரன்” என சூளுரைத்தார்.