கொடியன்குளம் கலவரம் குறித்த சர்ச்சை… கமுக்கமாக பேசி முடித்து சாதித்த உதயநிதி!

 

கொடியன்குளம் கலவரம் குறித்த சர்ச்சை… கமுக்கமாக பேசி முடித்து சாதித்த உதயநிதி!

பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சாதிய கொடுமைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிய மாரி செல்வாராஜுக்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இது ஒருபுறம் இருந்தால் படத்தில் காட்டப்பட்டிருக்கும் சாதிய கலவரம் நடைபெற்ற ஆட்சிக் காலம் குறித்த சர்ச்சை எழுந்தது.

கொடியன்குளம் கலவரம் குறித்த சர்ச்சை… கமுக்கமாக பேசி முடித்து சாதித்த உதயநிதி!

கொடியன்குளம் கலவரம் 1995ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது நடந்த சம்பவத்தை 1997ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடந்ததைப்போல் மாற்றிக்காட்டலாமா? திரைப்படத்தில் வரலாற்றை தவறாக திரிக்கலாமா? என்று இயக்குனர் மாரி செல்வராஜ்ஜை நோக்கி கேள்விகளையும் விமர்சனங்களையும் திமுக ஆதரவாளர்கள் முன்வைத்தனர். ஆனால் படக்குழு தரப்பில் மௌனம் காக்கப்பட்டது. இச்சூழலில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கமுக்காமக பேசி முடித்து தீர்வு கண்டுள்ளார்.

கொடியன்குளம் கலவரம் குறித்த சர்ச்சை… கமுக்கமாக பேசி முடித்து சாதித்த உதயநிதி!

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள உதயநிதி, “கர்ணன் பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகிய மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997இல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.