மோடிக்கு ஜால்ரா அடிக்கும் எடப்பாடி- உதயநிதி ஸ்டாலின்

 

மோடிக்கு ஜால்ரா அடிக்கும் எடப்பாடி- உதயநிதி ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சுமார் 10 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “மாவட்ட மாநாடு போல் பிற கட்சியினர் நம் கட்சியில் இந்த இணைப்பு விழாவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில், உதயசூரியன் பிரகாசமாக உதிக்க போகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் நடத்த அதிமுக அரசு தடை விதித்தது. ஆனால், மக்கள் கிராமசபை கூட்டத்தை நடத்தி, அவர்களின் பிரச்னைகளுக்கு திமுக தீர்வு கண்டுவருகிறது.

மோடிக்கு ஜால்ரா அடிக்கும் எடப்பாடி- உதயநிதி ஸ்டாலின்

பாஜவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. மோடிக்கு ஜால்ரா அடிப்பதுதான் எடப்பாடியின் ஒரே வேலை. அவர்களுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று முதல்வர் பொய் கூறுகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதியை திமுக பிடிக்கும் என கருத்துக்கணிப்பு சொல்கிறது. ஆனால், திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” எனக் கூறினார்.