‘ஊர்ந்து சென்று பதவியை வாங்குனது சசிகலாவுக்கு தெரியும்’.. எடப்பாடியை கலாய்த்த உதயநிதி!

 

‘ஊர்ந்து சென்று பதவியை வாங்குனது சசிகலாவுக்கு தெரியும்’.. எடப்பாடியை கலாய்த்த உதயநிதி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கான பணிகளில் அதிரடியாக களமிறங்கியிருக்கும் திமுக அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் மோடி கடுப்பில் இருக்கிறார். மோடி வாங்கிய 2 சொகுசு விமானங்களின் மதிப்பு ரூ.8 ஆயிரம் கோடி. பண மதிப்பிழப்பின் போது புது இந்தியா வரப்போகிறது என்று கூறினார். அதை நீங்கள் பார்த்தீர்களா? என்று கிண்டலடித்தார்.

‘ஊர்ந்து சென்று பதவியை வாங்குனது சசிகலாவுக்கு தெரியும்’.. எடப்பாடியை கலாய்த்த உதயநிதி!

தொடர்ந்து பேசிய அவர், தாத்தா ஆட்சியில் இருக்கும் போது ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு ஜெயலலிதா ஆட்சியில் மீண்டும் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வால் 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மோடியிடம் எடப்பாடி தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்து விட்டார். இந்த நிலைமை நீடித்தால் தமிழகத்தை விற்று விடுவார். தரையில் ஊர்ந்து சென்று தான் அவர் முதல்வரானார். அது சசிகலாவுக்கு தெரியும். அவர் காலை பிடித்து ஆட்சிக்கு வந்த பிறகு அவர் காலையே வாரி விட்டார். இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

‘ஊர்ந்து சென்று பதவியை வாங்குனது சசிகலாவுக்கு தெரியும்’.. எடப்பாடியை கலாய்த்த உதயநிதி!

மேலும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுக அமைச்சர்களே ஒப்புக் கொண்டு விட்டனர். அப்படி இருக்கும் போது திமுக தான் காரணம் என முதல்வர் கூறிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆட்சி தேவையா? என கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் வேண்டாம் என உரக்க குரலெழுப்பினர்.