நாகை துறைமுறைகத்தில் தேர்தல் பிரச்சாரம்: உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது!

 

நாகை துறைமுறைகத்தில் தேர்தல் பிரச்சாரம்: உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் திமுக, ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, தமிழகம் மீட்போம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு, ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே பரப்புரையை ஆரம்பித்து விட்டார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

நாகை துறைமுறைகத்தில் தேர்தல் பிரச்சாரம்: உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது!

கொரோனா இருக்கும் சூழலில் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அரசு அறிவித்திருக்கும் நிலையிலும், அதனை மீறி திருப்பூர் மாவட்டம் திருக்குவளையில் நேற்று பரப்புரை கூட்டம் நடத்தினார். அதனால் போலீசார் அவரை நேற்று மாலை கைது செய்தனர். கைது செய்தாலும் திமுகவின் தேர்தல் பரப்புரை தொடரும் என கூறியிருந்தார். அதன் படி, இன்று நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் மீண்டும் பிரச்சாரம் நடத்தினார்.

இந்த நிலையில், அரசின் உத்தரவை மீறி கூட்டம் நடத்தியதற்காக உதயநிதி ஸ்டாலினை இன்று மீண்டும் போலீசார் கைது செய்தனர். அவருடன் கே.என். நேரு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.