‘அதிக தொகுதிகளில் திமுக போட்டியிடும்’ – உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

 

‘அதிக தொகுதிகளில் திமுக போட்டியிடும்’ – உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

கடந்த சட்டபேரவை தேர்தலை விட, வரும் தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிடும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டத்தில் இன்று இரண்டாம் நாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், அடுத்து ஆட்சிக்கு வரப் போவது திமுக தான். அதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசு, தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கியுள்ளது என்று கூறினார்.

‘அதிக தொகுதிகளில் திமுக போட்டியிடும்’ – உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்று கூறிய உதயநிதி, கடந்த முறை தேர்தலில் திமுக போட்டியிட்ட தொகுதிகளை விட அதிகமான எண்ணிக்கையில் இந்த முறை போட்டியிடும். இயற்கையாக அமைந்த கூட்டணியால் தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. அதைப் போலவே இந்த முறையும் வெற்றிக் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை ஸ்டாலின் அறிவிப்பார் என்று பேசினார்.