வாரஇறுதி லாக்டவுனை அறிவித்த மகாராஷ்டிரா.. லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகளை விதித்த ராஜஸ்தான்

 

வாரஇறுதி லாக்டவுனை அறிவித்த மகாராஷ்டிரா.. லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகளை விதித்த ராஜஸ்தான்

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, வாரஇறுதி லாக்டவுனை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வத அலை உருவாகி உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் உள்பட சில மாநிலங்களில் கொரோன வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை மட்டும் புதிதாக 49,447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 277 பேர் கொரோனாவுக்கு உயிர் இழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்கனவே இரவு ஊரடங்கை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு அமல்படுத்தியுள்ளது.

வாரஇறுதி லாக்டவுனை அறிவித்த மகாராஷ்டிரா.. லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகளை விதித்த ராஜஸ்தான்
கொரோனா வைரஸ் பரிசோதனை

இந்நிலையில் வார இறுதி லாக்டவுனை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநிலத்தில் வாரஇறுதி லாக்டவுன் விதிக்கப்படும் என தெரிவித்தார். வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை லாக்டவுன் அமலில் இருக்கும். அதேவேளையில் இரவு ஊரடங்கும் தொடரும் என அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு லாக்டவுனிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வாரஇறுதி லாக்டவுனை அறிவித்த மகாராஷ்டிரா.. லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகளை விதித்த ராஜஸ்தான்
இரவு ஊரடங்கு (கோப்புப்படம்)

ராஜஸ்தானிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அசோக் கெலாட் தலைமையைிலான அரசு லாக்டவுன் போன்ற கட்டுபாடுகளை அறிவித்துள்ளது. அதுவும் உடனடியாக வருவதாக அறிவித்துள்ளது. திரையரங்குள், சினிமா ஹால்ஸ் மற்றும் மல்டிப்ளக்ஸ் உள்ளிட்டவை உடனடியாக மூடப்படுகிறது. திருமணங்களில் 100 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி கிடையாது. அம்மாநிலத்துக்கு வருவதாக இருந்தால் ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை அவசியம். 1ம் முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து ரத்து செய்யப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் தேவைப்பட்டால் இரவு ஊரடங்கை அமல்படுத்தி கொள்ளலாம் ஆனால் அரசின் அனுமதி பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.