இளைஞரணித் தலைவராக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்த உதயநிதி! – குவியும் பாராட்டு
இளைஞரணித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டு ஆகிறது.
ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற 2ம் ஆண்டு துவக்க நாள் இன்று. ஆற்றவேண்டிய கழகம், மக்கள் பணிகளை மனதிலேந்தி, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களிலும், கோபாலபுரம்-சிஐடி காலனி இல்லங்களிலுள்ள கலைஞர் அவர்களின் திருவுருவ படத்துக்கும் மலரஞ்சலி செலுத்தினேன் #DMK4YOUTH pic.twitter.com/hEX61dEA1E
— Udhay (@Udhaystalin) July 4, 2020
இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பிறகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஓராண்டுக்கு முன்பு அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பின் படத்தை தி.மு.க தொண்டர்கள் பலரும் பகிர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.