‘தயவுசெய்து சாத்தான்குளம் செல்லுங்கள் முதல்வரே…’ உதயநிதி ஸ்டாலின்

 

‘தயவுசெய்து சாத்தான்குளம் செல்லுங்கள் முதல்வரே…’ உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தற்போது பல மாவட்டங்களுக்குச் சென்று கொரோனா தொற்றுப்பரவல் நிலவரம் கேட்டறிதல் மற்றும் அந்தப் பகுதி நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பது போன்றவற்றில் கலந்துகொள்கிறார். ஜூன் 12- ம் தேதி மேட்டூர் அணை திறப்புக்கு நேரடியாகச் சென்றிருந்தார். ஜூன் 25 ம் தேதி ஈரோடு, பெருந்துறையில் அத்திக்கடவு – அவினாசி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார்.

‘தயவுசெய்து சாத்தான்குளம் செல்லுங்கள் முதல்வரே…’ உதயநிதி ஸ்டாலின்

நேற்று (ஜூன் 26) திருச்சியில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணி, கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள், முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகள் ஆய்வு என முதல்வரின் சுற்றுப்பயணம் பரபரப்பாகவே இருந்துவருகிறது.

இந்நிலையில் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரை சாத்தான்குளத்திற்கும் செல்லச் சொல்லி பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில், ’10ம் வகுப்புத் தேர்வு ரத்து, நடமாடும் பரிசோதனை நிலையம், மாவட்ட வாரியாகக் கொரோனா ஆலோசனை கூட்டம்… என அனைத்துமே தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கைக்குப் பயந்தே செய்கிறீர்கள் @CMOTamilNadu. நன்றி. இன்னும் ஒரு வேண்டுகோள். திருச்சியிலுள்ள நீங்கள் தயவுசெய்து சாத்தான்குளம் வரை செல்லுங்கள்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடியாகவே அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் மருது அழகுராஜ் பதிவுகளை இட்டு வருகிறார் எனச் சொல்லப்படுகிறது.