அனுமதியின்றி பரப்புரைக் கூட்டம் : உதயநிதி ஸ்டாலின் கைது!

 

அனுமதியின்றி பரப்புரைக் கூட்டம் : உதயநிதி ஸ்டாலின் கைது!

உரிய அனுமதி பெறாமல், தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடத்தியதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்துள்ளனர்.

அனுமதியின்றி பரப்புரைக் கூட்டம் : உதயநிதி ஸ்டாலின் கைது!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்குவதற்காக திருவாரூர் சென்றிருந்தார். முதற்கட்டமாக கலைஞரின் தாயார் சமாதிக்கு சென்று வணங்கிய அவர், திருக்குவளைக்கு புறப்பட்டார். அப்போதே போலீசார் அவருக்கு கட்டுப்பாடுகள் விதித்தனர்.

அனுமதியின்றி பரப்புரைக் கூட்டம் : உதயநிதி ஸ்டாலின் கைது!

இந்த நிலையில், அனுமதியின்றி திருக்குவலைனில் கூட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. கைது செய்தாலும் பரப்புரையை தொடர்ந்து நடத்துவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தடையை மீறி கூட்டம் நடத்தினால் உதயநிதியை கைது செய்ய ஏற்கனவே அப்பகுதியில், 10 டி.எஸ்.பி, 14 ஆய்வாளர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.