கடன் தொல்லையால் இருசக்கர வாகன விற்பனையாளர் தூக்கிட்டு தற்கொலை!

 

கடன் தொல்லையால் இருசக்கர வாகன விற்பனையாளர் தூக்கிட்டு தற்கொலை!

கரூர்

கரூரில் கடன் தொல்லையால் பழைய இருசக்கர வாகன விற்பனை நிலைய உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் நகர் சின்னாண்டான் கோவில் சாலை பசுபதி லேஅவுட்-ஐ சேர்ந்தவர் ரகுபதி (55). இவர் கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் பழைய இருசக்கர வாகன விற்பனையகம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், ரகுபதி வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்காக, வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். இதற்காக அசலையும், வட்டியையும் சேர்த்து பல லட்சம் திருப்பிச செலுத்தியுள்ளார்.

கடன் தொல்லையால் இருசக்கர வாகன விற்பனையாளர் தூக்கிட்டு தற்கொலை!

எனினும், கடன் கொடுத்தவர்கள் அதிக வட்டித்தொகை கேட்டு அவருக்கு மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டு வந்த ரகுபதி, நேற்று காலை தனது கடையில் தூக்குபோடு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில், கடன் கொடுத்தவர்களால் தனது குடும்பத்தினருக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் பார்த்துக் கொள்ளுமாறு கரூர் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுகுறித்து தகவலின் பேரில் கரூர் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.