இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – மண்டி உரிமையாளர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – மண்டி உரிமையாளர் பலி!

திருச்சி

மணப்பாறை அருகே சாலை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது, லாரி மோதிய விபத்தில் மண்டி உரிமையாளர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கள்ளக்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (72). இவர் துவரங்குறிச்சியில் விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் மண்டி நடத்தி வந்தார். இந்த நிலையில், வீரப்பன் நேற்று செவந்தம்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு விட்டு, மதுரை – திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – மண்டி உரிமையாளர் பலி!

அப்போது, மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த வீரப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருததுவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரப்பன் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பத்வு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.