இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – பெண் அஞ்சலக ஊழியர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – பெண் அஞ்சலக ஊழியர் பலி!

நெல்லை

நெல்லை அருகே இருசக்கர வாகனம்மீது லாரி மோதிய விபத்தில் அஞ்சல் துறை பெண் ஊழியர் உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த கோமதியாபுரம் பகுதியை சேர்ந்தவர் திருவுடையான். இவரது மகள் அன்பரசி (21). இவர் அழகிய பாண்டியபுரம் அஞ்சலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று அன்பரசி அழகிய பாண்டியரத்தில் இருந்து மானூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – பெண் அஞ்சலக ஊழியர் பலி!

மானூர் அருகே சென்றபோது அன்பரசி வாகனத்தின் மீது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து திருவுடையான் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாலை விபத்தில் இளம்பெண் பலியான சம்பவம் கோமதியாபுரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.