இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – ஒருவர் உயிரிழப்பு

 

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் கூட்டுரோடு பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – ஒருவர் உயிரிழப்பு
rep image

கிருஷ்ணகிரி மாவட்டம் எர்ரம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் (50) என்பவர், தனது நண்பர் ராமச்சந்திரன் (50) உடன் திருப்பத்தூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். நத்தம் கூட்டுரோடு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேர் படுகாயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – ஒருவர் உயிரிழப்பு