குளித்தலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி!

 

குளித்தலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி!

கரூர்

குளித்தலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அடுத்த தேவஸ்தானம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் நேற்று தனது மனைவியுடன் கரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திம்மாச்சிபுரம் புத்துக்கோவில் அருகே சென்றபோது மோகன் வாகனத்தின் மீது, எதிர்பாராத விதமாக எதிரே திருப்பூரில் இருந்து நாகை நோக்கி சென்று கொண்டிருந்த அரவிந்த் என்பவரது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது.

குளித்தலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி!

இதில், வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே மோகன், அரவிந்த் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.