இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில், இருவர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில், இருவர் பலி!

தருமபுரி

தருமபுரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது நண்பர் கோவையை சேர்ந்த சதீஷ்குமார். இவர்கள் இருவரும் இன்று தருமபுரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில், சேலத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில், இருவர் பலி!

தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொம்பரக்காம்பட்டி பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை ரமேஷ் முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், இருவர் மீதும் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஏறியது. இதில் ரமேஷ், சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த தொப்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரச மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கண்டெய்னர் லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.