இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காவலர் பலி!

 

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காவலர் பலி!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் வெங்கடேசன் (28). இவர் சட்டமன்ற தேர்தலையொட்டி, ஒரகடம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையில் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று வெங்கடேசன் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் கூட்டுரோடு அருகே சென்றபோது வெங்கடேசன் வாகனத்தின் மீது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்திற்கு உள்ளது. இதில் வெங்கடேசன் உள்பட இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காவலர் பலி!

அங்கு வெங்கடேசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறினார். மேலும், விபத்தில் காயமடைந்த வாலாஜாபாத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.