இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – 6 பேர் படுகாயம்!

 

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – 6 பேர் படுகாயம்!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், மிட்டப்பள்ளி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், சிறுவர்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் கருத்தானுர் கிராமத்தை சேர்ந்த ஞானசேகர் மகன் ஹரிஷ் வயது 25. செங்கம் நோக்கி கொண்டிருந்துள்ளார். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு சென்றுகொண்டிருந்த, திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் அவரது மனைவி ரவினா, மகன் கௌதம் உள்ளிட்டவர்கள் வந்த இருசக்கர வாகனம், ஹரீஸ் வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அனைவருக்கும் தூக்கி வீசப்பட்ட் நிலையில், ஹரிஸ் கால் உடைந்ததுடன், மற்றவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளுக்கு வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.