சேலம் ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர், திருச்சியில் கைது

 

சேலம் ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர், திருச்சியில் கைது

சேலம்

சேலத்தில் ரவுடி செல்லதுரை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவரை, திருச்சியில் சுற்றிவளைத்து போலீசார் கைதுசெய்தனர். சேலம் கிச்சிப்பாளையம் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை(35). பிரபல ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி அன்று வீட்டின் அருகே நின்றிருந்த செல்லதுரை, மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, அதிமுக வார்டு செயலாளர் பழனிசாமி, பிரபல ரவுடிகள் சூரி, தண்டி ஜெயக்குமார், சதிஷ் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர்.

சேலம் ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர், திருச்சியில் கைது

மேலும், கொலையில் முக்கிய குற்றவாளியான ஜான் என்கிற சாணக்கியன், அவரது தம்பி சாரதி உள்ளிட்ட 15 பேர் கரூர் மற்றும் நாமக்கல் நீதிமன்றங்களில் சரண் அடைந்தனர். இதனை தொடர்ந்து கொலையில் தொடர்புடைய ரவுடி சூரியின் மகன்கள் சீசஸ், சிலம்பரசன், குட்டியப்பன், டெனிபா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ரகசிய தகவலின் பேரில் இன்று திருச்சியில் பதுங்கியிருந்த சீசஸ், குட்டியப்பன் ஆகியோரை போலீசார் சுற்றிவளைத்து அதிரடியாக கைதுசெய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கொலையில் தொடர்புடைய ஜான் உள்ளிட்ட 7 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.