“ஆம்புலன்சுக்குள்ளிருந்த ஆம்பளைங்களுக்கு நடுவே ….”சகோதரிகளுக்கு நடந்த விபரீதம்

 

“ஆம்புலன்சுக்குள்ளிருந்த ஆம்பளைங்களுக்கு நடுவே   ….”சகோதரிகளுக்கு நடந்த விபரீதம்

சகோதரிகளுக்கு ஆம்புலன்சில் லிப்ட் கொடுத்து பலாத்காரம் செய்த மூவரை போலீஸ் கைது செய்தது

“ஆம்புலன்சுக்குள்ளிருந்த ஆம்பளைங்களுக்கு நடுவே   ….”சகோதரிகளுக்கு நடந்த விபரீதம்


உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள சைபாய் நகரில் மெயின்புரியில் உள்ள குர்ரா பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் இரு திருமணமான சகோதரிகள் வசித்து வந்தனர் .அதில் இளைய சகோதரிக்கும் அவரின் கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது .அதனால் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த பெண்ணின் கணவர் மீது புகார் கொடுத்து விட்டு ,அன்று இரவு வீடு திரும்ப அங்குள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர் .
அப்போது அவர்கள் அருகே ஒரு ஆம்புலன்ஸ் வந்து நின்றது .அந்த ஆம்புலன்சில் இருந்த சில ட்ரைவ்ர்கள் அந்த பெண்களிடம் அவர்களை லிப்ட் கொடுத்து கூட்டி செல்வதாக ஆசை வார்த்தை கூறினார்கள் .
அதை உண்மையென்று நம்பிய அந்த பெண்கள் அவர்கள் பேச்சை நம்பி அந்த ஆம்புலன்ஸில் சென்றார்கள் .பிறகு அவர்கள் அந்த ஆம்புலன்ஸை ஒரு ரயில்வே சுரங்கப்பாதையில் நிறுத்தினர் .பிறகு அங்குள்ள உள்ள ஒரு கடைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். .அதன் பிறகு அந்த பெண்களை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டனர் .பிறகு அந்த பெண்கள் அழுவதை பார்த்து விசாரித்த போலிஸாரிடம் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிந்து இரண்டு தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உட்பட மூன்று குற்றவாளிகளை கைது செய்தனர்