பாகிஸ்தானில் சாலையோர குண்டுவெடிப்பில் 2 பள்ளி ஆசிரியர்கள் பரிதாப பலி

 

பாகிஸ்தானில் சாலையோர குண்டுவெடிப்பில் 2 பள்ளி ஆசிரியர்கள் பரிதாப பலி

பெஷாவர்: பாகிஸ்தானில் சாலையோர குண்டுவெடிப்பில் 2 பள்ளி ஆசிரியர்கள் பரிதாப பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் எல்லையிலுள்ள பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் சாலையோர வெடிகுண்டு வெடிப்பில் இரண்டு பள்ளி ஆசிரியர்கள் பரிதாபமாக பலியாகினர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பஜுவார் மாவட்டத்தில் டமடோலா பகுதியில் ஒரு நீரோடை அருகே வெடிகுண்டு வெடித்தபோது இரு ஆசிரியர்களும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்களில் அப்துர் ரஹ்மான் தனியார் பள்ளியிலும் மற்றும் இஸ்மாயில் அரசுப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றி வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எந்தவொரு தனிநபரோ அல்லது தீவிரவாத குழுவோ இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலிபான் தீவிரவாதிகள் தான் பெரும்பாலும் இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.