இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், பள்ளி மாணவர்கள் இருவர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், பள்ளி மாணவர்கள் இருவர் பலி!

கடலூர்

திட்டக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள செங்கமேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் பிரவீன் குமார்(17). அதே பகுதியை சேர்ந்த இங்கர்சால் என்பவரது மகன் ஜெயசூரியா(17). நண்பர்களான இருவரும், இறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், பள்ளி மாணவர்கள் இருவர் பலி!

இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் பென்னாடம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். கூடலூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் மீது, எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜெயசூர்யா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த பிரவீன்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து, பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.