ஈரோட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 2 ரவுடிகள் வெட்டி படுகொலை!

 

ஈரோட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 2 ரவுடிகள் வெட்டி படுகொலை!

ஈரோடு

ஈரோட்டில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் 2 ரவுடிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு அருகேயுள்ள கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலை என்கிற கலைச்செல்வன்(30). இதேபோல கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் குணா என்கிற குணசேகரன்(38). இவர்கள் கடந்த 2018ஆம் ஆண்டு கருங்கல்பாளையத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.

இந்த நிலையில் இன்று வழக்கின் விசாரணைக்காக கலைச்செல்வன், குணசேகரன் உள்ளிட்ட 10 பேர், ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.தொடர்ந்து, வீரப்பன் சத்திரம் சிதம்பரனார் வீதிக்கு சென்று மது அருந்திக் கொண்டிருந்தனர்.

ஈரோட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 2 ரவுடிகள் வெட்டி படுகொலை!

அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் கலைச்செல்வன் மற்றும் குணசேகரனை அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கல்லால் தாக்கியும் படுகொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த ஈரோடு டவுன் டிஎஸ்பி ராஜு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீடடு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.