வேளாங்கண்ணியில் நீர் நிலைகளில் மூழ்கி, 3 வயது சிறுவன் உட்பட இருவர் பலி

 

வேளாங்கண்ணியில் நீர் நிலைகளில் மூழ்கி, 3 வயது சிறுவன் உட்பட இருவர் பலி

நாகை

வேளாங்கண்ணி சுற்றுவட்டார பகுதியில் இருவேறு இடங்களில் நீர்நிலைகளில் மூழ்கி 3 வயது சிறுவன் உட்பட இருவர் உயிழந்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர்கள் பெலிக்ஸ்-ரோஸி தம்பதியினர். இவர்களது 3 வயது மகன் மைக்கேல். இவர் இன்று வீட்டின் அருகேயுள்ள சிவன்கோயில் குளத்தில் நண்பர்களுடன் விளையாடி உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்ததில், சிறுவன் நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக வேளாங்கண்ணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

வேளாங்கண்ணியில் நீர் நிலைகளில் மூழ்கி, 3 வயது சிறுவன் உட்பட இருவர் பலி

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின் சிறுவனை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, காவல் துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல, வேளாங்கண்ணி அடுத்த ரெட்டாலடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த ஹரிஹரன்(18) என்பவர், வீட்டின் அருகேயுள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.