மின்சாரம் தாக்கி தனியார் வங்கி ஊழியர் உட்பட இருவர் பலி

 

மின்சாரம் தாக்கி தனியார் வங்கி ஊழியர் உட்பட இருவர் பலி

கடலூர்

காட்டுமன்னார்கோவில் அருகே டிவி பார்க்க முயன்றபோது மின்சாரம் தாக்கி, தனியார் வங்கி ஊழியர் உள்பட 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்த பெறுங்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியசீலன். அதே பகுதியை சேர்ந்தவர் தனியார் வங்கி ஊழியர் பாலுச்சாமி. நண்பர்களான இருவரும் இன்று காலை 9 மணி அளவில் வீட்டில் டிவி பார்க்க சென்றுள்ளனர். அப்போது, சத்தியசீலன் டிவி ஸ்விட்சை ஆண் செய்தபோது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்ட பாலுச்சாமி உடனடியாக அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மின்சாரம் தாக்கி தனியார் வங்கி ஊழியர் உட்பட இருவர் பலி

மின் விபத்து குறித்து தகவல் அறிந்த காட்டுமான்னார் கோயில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக சத்தியசீலன் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.