கல்குவாரியில் மண் சரிவில் சிக்கி, வடமாநில தொழிலாளர்கள் இருவர் பலி!

 

கல்குவாரியில் மண் சரிவில் சிக்கி, வடமாநில தொழிலாளர்கள் இருவர் பலி!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் புதைந்து வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகேயுள்ள பட்டா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் ஜே.சி.பி ஆபரேட்டர்களாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷேர்கான்(39) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில் ஷேசாத்ரி (41) ஆகியார் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இருவரும் ஜே.சி.பி இயந்திரத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கல்குவாரியில் மண் சரிவில் சிக்கி, வடமாநில தொழிலாளர்கள் இருவர் பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மண் சரிந்து விழுந்தது. இதில் சுமார் 30 அடி பள்ளத்தில் மண்ணில் புதைந்த இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த சாலவாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்பு பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சுதாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.