கந்தன்சாவடியில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளர்கள் இருவர் பலி

 

கந்தன்சாவடியில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளர்கள் இருவர் பலி

சென்னை

சென்னை கந்தன்சாவடியில் மழைநீரை மோட்டார் மூலம் அகற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். சென்னை அடுத்த கந்தன்சாவடியில் செயல்பட்டு வரும் ஹார்டுவேர் கடையில் வடமாநிலத்தை சேர்ந்த பெரு(35), மற்றும் பிங்கு(22) ஆகியோர் வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் கனமழை காரணமாக கடைக்கு அருகில் தேங்கியிருந்த மழைநீரை, இன்று காலை மின் மோட்டார் மூலம் அகற்றும் பணியில் இருவரும் ஈடுபட்டு இருந்தனர்.

கந்தன்சாவடியில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளர்கள் இருவர் பலி

அப்போது, ஸ்விட்சை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மயக்க நிலைக்கு சென்ற இருவரையும் அந்த பகுதியினர் மீட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து தரமணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.