திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேருக்கு கொரோனா!

 

திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேருக்கு கொரோனா!

திமுக எம்எல்ஏ ஒருவருக்கும், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் உள்ள முன் களப் பணியாளர்கள் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் ஏற்கெனவே, அமைச்சர்கள் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேருக்கு கொரோனா!

இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜனுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.