‘செல்போனால் சீரழிந்த சிறுவர்கள்’ -ஒரு வயது பெண் குழந்தையை கடத்தி,பலாத்காரம் செய்து கொன்ற 12 வயது சிறுவர்கள் .
இன்று தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகள் இருந்தாலும் ,அதிலும் பல தீமைகள் இருக்கத்தானே செய்கின்றன .சிறுவர்களின் கைகளில் இருக்கும் ஆண்ட்ராயிடு போன்களில் வரும் ஆபாச படங்களால் பிஞ்சுகளின் மனதில் நஞ்சு கலக்கப்படுகிறது .இதனால் நடந்த ஒரு விபரீதத்தை படியுங்கள் .
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் செவ்வாய்க்கிழமையன்று மாலை ஒரு வயது பெண் குழந்தை தன்னுடைய 4 வயது சகோதரியோடு விளையாடிக்கொண்டிருந்தாள் .அப்போது அங்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த 12 வயதுள்ள இரண்டு சிறுவர்கள் அந்த ஒரு வயது பெண் குழந்தையை அருகேயுள்ள ஒரு தனிமையான இடத்திற்கு தூக்கி சென்றனர் .
அதன் பிறகு அவர்களிருவரும் சேர்ந்து ,அந்த குழந்தையினை பலாத்காரம் செய்ததில் அந்த குழந்தை மூச்சு திணறி இறந்துள்ளது .இதனால் பயந்து போன சிறுவர்கள், அந்த குழந்தையினை அருகேயுள்ள ஒரு தொட்டியில் போட்டு விட்டு ,ஊருக்குள் சென்று குழந்தை கொய்யாப்பழம் சாப்பிடும்போது மூச்சு திணறி இறந்துவிட்டாள் என்று பொய் சொல்லியுள்ளனர் .
இருந்தாலும் குழந்தையினை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது ,குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் மூச்சு திணறி இறந்துள்ள விஷயம் வெளியே தெரிந்தது .இதனால் அந்த இரண்டு சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர் .