‘கூப்பிடும்போதெல்லாம் வரணும் ,இல்லேன்னா வீடியோ வந்துடும்’ -சகோதரிகளை வீடியோ எடுத்து மிரட்டி பலமாதம் பலாத்காரம் செய்த கூட்டம்..

 

‘கூப்பிடும்போதெல்லாம் வரணும்  ,இல்லேன்னா வீடியோ வந்துடும்’ -சகோதரிகளை வீடியோ எடுத்து மிரட்டி பலமாதம் பலாத்காரம் செய்த கூட்டம்..

இரவு நேரத்தில் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றிய இரண்டு சகோதரிகளை ,எட்டு பேர் வழிமடக்கி வீடியோ எடுத்து மிரட்டி, பலமாதமாக பலாத்காரம் செய்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

‘கூப்பிடும்போதெல்லாம் வரணும்  ,இல்லேன்னா வீடியோ வந்துடும்’ -சகோதரிகளை வீடியோ எடுத்து மிரட்டி பலமாதம் பலாத்காரம் செய்த கூட்டம்..

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில் 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு மைனர் சகோதரிகள் .மே மாதம் 31ம் தேதியன்று இரவு தங்களின் ஆண் நண்பர்களுடன் இரவு பார்ட்டிக்கு போய்விட்டு அதிகாலையில் 2 மணிக்கு வந்துள்ளனர் .அப்போது அந்த இரவு நேரத்தில் அந்த பகுதியில் ஒளிந்திருந்த 8 பேர், அந்த சிறுமியோடு வந்த ஆண் நணபர்களை அடித்து விரட்டிவிட்டு ,அந்த இரண்டு சகோதரிகளையும் கடுமையாக தாக்கி , பலாத்காரம் செய்துள்ளனர் .இதை வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டனர் .அந்த எட்டு பேரில் அந்த சிறுமிகளின் உறவினர் ஒருவரும் உள்ளார் .
பிறகு அந்த எட்டு பேரும் கடந்த இரண்டு மாதமாக அந்த சிறுமிகளை அந்த பலாத்கார வீடியோவினை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டியே, பலமுறை அவ்ர்கள் சொல்லும் இடத்திற்கு வரவைத்து பலாத்காரம் செய்துள்ளனர் .இதனால் அந்த இரண்டு சிறுமிகளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள் .
இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று அந்த எட்டு பேரில் ஒருவர் அந்த சிறுமிக்கு போன் செய்து அவர்கள் சொல்லுமிடத்திற்கு மீண்டும் வரச்சொல்லி மிரட்டியுள்ளார் .இதனால் அந்த சிறுமிகள் ‘பெண்கள் உதவி எண்’ணுக்கு போன் செய்து தங்களின் புகாரை பதிவு செய்தனர் .

‘கூப்பிடும்போதெல்லாம் வரணும்  ,இல்லேன்னா வீடியோ வந்துடும்’ -சகோதரிகளை வீடியோ எடுத்து மிரட்டி பலமாதம் பலாத்காரம் செய்த கூட்டம்..
புகாரை பெற்ற அந்த ஹெல்ப் லைன் போலீசார் விரைந்து வந்து அந்த சிறுமிகளிடம் நேரில் சென்று புகாரை பெற்றுக்கொண்டனர் .பிறகு அவர்களை மிரட்டும் வாலிபர்களின் விலாசத்தினை வாங்கிக்கொண்டு போய் அந்த கூட்டத்தினை போலீசார் கைது செய்தனர் .அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.