விளையாடிய சிறுமியை களவாடிய கயவர்கள் -பலாத்காரம் செய்து ஏரியில் வீசப்பட்ட மூன்று வயது சிறுமி ..

 

விளையாடிய சிறுமியை களவாடிய கயவர்கள் -பலாத்காரம் செய்து ஏரியில் வீசப்பட்ட மூன்று வயது சிறுமி ..

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் ஜூலை 17ம் தேதியன்று மூன்று வயது சிறுமி வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்தாள் .அப்போது அந்த பகுதியை சேர்ந்த ரித்தேஷ் சிங் துர்வே (22) மற்றும் தன்பால் (21) ஆகியோர் அங்கு வந்தனர் .அவர்கள் அந்த சிறுமியை அருகிலுள்ள ஒரு தோட்டத்திற்கு கடத்தி சென்றனர் .அப்போது சிறுமி கூச்சலிட்டு கத்தியபோது,அவர்கள் வாயில் துணியை வைத்து அழுத்தி தூக்கிக்கொண்டு சென்றனர் .

விளையாடிய சிறுமியை களவாடிய கயவர்கள் -பலாத்காரம் செய்து ஏரியில் வீசப்பட்ட மூன்று வயது சிறுமி ..
பிறகு அருகிலுள்ள தோட்டத்தில் வைத்து இரண்டு இளைஞர்களும் அவரை பலாத்காரம் செய்துள்ளனர் .அதற்கு பிறகு சிறுமி உயிரோடிருந்தால் தங்களை காட்டிக்கொடுத்து விடுவாரென்று கருதிய அவர்கள் ,அந்த சிறுமியை கழுத்தை நெரித்து கொன்று அருகிலுள்ள ஏரியில் வீசியுள்ளனர் .

விளையாடிய சிறுமியை களவாடிய கயவர்கள் -பலாத்காரம் செய்து ஏரியில் வீசப்பட்ட மூன்று வயது சிறுமி ..
சிறுமியை இரண்டு நாட்களாக காணாமல் பல இடங்களில் தேடிய அவரின் பெற்றோர் ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தனர் ,இதனடிப்படையில் போலீசார் பல இடங்களில் தேடியபோது சிறுமியின் பிணம் அங்குள்ள ஒரு ஏரியில் மிதப்பதை கண்டறிந்தார்கள் .பிறகு சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி

 

வைத்தனர் .பிறகு போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த பகுதியை சேர்ந்த ரிதேஷ மற்றும் தன்பால் ஆகியோரை பிடித்து விசாரித்த போது அவர்கள், தாங்கள்

சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள் .பிறகு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள் .இந்த வழக்கில் விசாரணையை விரைவாக நடத்தி ,

விளையாடிய சிறுமியை களவாடிய கயவர்கள் -பலாத்காரம் செய்து ஏரியில் வீசப்பட்ட மூன்று வயது சிறுமி ..

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை கிடைப்பதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ செய்தி தெரிவிக்கிறது.