நாங்குநேரி அருகே பெண்கள் தலையைத் துண்டித்து கொடூரக் கொலை; பதைபதைக்கும் சம்பவம்!

 

நாங்குநேரி அருகே பெண்கள் தலையைத் துண்டித்து கொடூரக் கொலை; பதைபதைக்கும் சம்பவம்!

முன்விரோதம் காரணமாக நாங்குநேரி அருகே 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரியில் மறுகால்குறிச்சி பகுதியில் வசித்து வந்த பெண்கள் சண்முகத்தாய் மற்றும் சாந்தி. இன்று காலை யாரும் இல்லாத நேரம் பார்த்து அவர்களின் வீட்டுக்கு சென்ற மர்ம நபர்கள், தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நாங்குநேரி அருகே பெண்கள் தலையைத் துண்டித்து கொடூரக் கொலை; பதைபதைக்கும் சம்பவம்!
rep image

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 2019ம் ஆண்டு, அப்பகுதியில் ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொண்ட தம்பதியால் ஒரு தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்றதாகவும் இதில் 2 பேர் கொலை செய்யப்பட்டதாகவும் இதில் பாதிக்கப்பட்ட தரப்பினர் பழிக்கு பழி வாங்கியதால் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

நாங்குநேரி அருகே பெண்கள் தலையைத் துண்டித்து கொடூரக் கொலை; பதைபதைக்கும் சம்பவம்!

மேலும், சிறையில் இருந்து வெளியே வந்த நபர்கள் அந்த பெண்களை கொலை செய்திருக்கலாம் என்றும் இதுவரை இச்சம்பவத்தில் 5 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதும் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.