“ஒரே பொண்ணுக்கு போட்டி போடுவது போல ,ஒரே நாயை வாங்க நடந்த போட்டி ” இரு கோஷ்டிக்கிடையே நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் பலி ..

 

“ஒரே பொண்ணுக்கு போட்டி போடுவது போல ,ஒரே நாயை வாங்க நடந்த போட்டி ” இரு கோஷ்டிக்கிடையே நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் பலி ..

ஒரே பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள இரண்டு ஆண்கள் போட்டியிடுவதைத்தான் நாம் சினிமாவிலும் ,நிஜத்திலும் பார்த்திருக்கிறோம் .ஆனால் ஒரே நாயை விலைகொடுத்து வாங்க இரு கோஷ்டிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

“ஒரே பொண்ணுக்கு போட்டி போடுவது போல ,ஒரே நாயை வாங்க நடந்த போட்டி ” இரு கோஷ்டிக்கிடையே நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் பலி ..

உத்திரபிரதேச மாநிலம் பிஜினோரில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமையன்று நாய் சந்தை நடக்கும் .இந்த சந்தையில் பலர் தங்களுக்கு பிடித்தமான நாயை விலை கொடுத்து வாங்கி செல்வார்கள் .அப்படி கடந்த செவ்வாயன்று நடந்த நாய் சந்தையில் ஒரே நாயை வாங்குவதற்கு இருவருக்கிடையே கடுமையான போட்டி நிலவியது .இருவரும் ஒரே நாயை விலை கொடுத்து வாங்க போட்டி போட்டனர் ,அப்போது இருவரும் தங்களுடைய கோஷ்டிகளோடு அந்த சந்தையிலேயே துப்பாக்கியால் சுட்டு மோதிக்கொண்டனர் .அப்போது இரு கோஷ்டிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் அங்கிருந்த பிரசாந்த் மற்றும் சுரேந்திரா ஆகிய இருவரும் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்கள் .மேலும் ஒருவர் தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் இருக்கிறார் .
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு போலீஸ் படையுடன் விரைந்து வந்தார்கள் .
அப்போது இந்த சம்பவத்தில் இரு குழுக்களும் சட்டவிரோதமாக துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக போலீசார் கூறினார்கள் . இந்த இரு குழுக்களுக்கும் எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அங்கு மோதலில் ஈடுப்பட்ட அந்த இரு குழுக்களை சேர்ந்த அனைவரும் தப்பி ஓடி விட்டனர் ,ஆனால் வேடிக்கை பார்த்த அப்பாவிகள் துப்பாக்கி குண்டுக்கு பலியாகியுள்ளார்கள் .

“ஒரே பொண்ணுக்கு போட்டி போடுவது போல ,ஒரே நாயை வாங்க நடந்த போட்டி ” இரு கோஷ்டிக்கிடையே நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் பலி ..