மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலி!

 

மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலி!

தேனி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த ஓடைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (45). விவசாயி. இவர் நேற்று முன்தினம், அதே பகுதியை சேர்ந்த சென்னய்யன் ( 42), விக்னேஷ் (35) ஆகியோருடன் மதுரை மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த திருமணத்தில் பங்கேற்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தர்.

மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலி!

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக வாகனம், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சென்னயன், விக்னேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருந்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி சென்னையன் நேற்று உயிரிழந்தார். விக்னேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து குறித்து கடமலைகுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.