இருசக்கர வாகன விபத்தில் திருநங்கை உள்பட இருவர் பலி!

 

இருசக்கர வாகன விபத்தில் திருநங்கை உள்பட இருவர் பலி!

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திருநங்கை உட்பட இருவர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள மங்கலமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவர் நேற்றிரவு பெரம்பலூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். தண்ணீர் பந்தல் அருகே வந்தபோது அவரிடம் கௌல்பாளையம் பகுதியை சேர்ந்த திருநங்கை கிருஷ்ணமூர்த்தி என்பவர் லிப்ட் கேட்டு ஏறி உள்ளார்.

இருசக்கர வாகன விபத்தில் திருநங்கை உள்பட இருவர் பலி!

இந்த நிலையில் செங்குணம் பிரிவு சாலை அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.