இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து… பெண் உள்பட இருவர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து… பெண் உள்பட இருவர் பலி!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நகருக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் கொசமேடு பகுதியை பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் மேகலா, லட்சுமி ஆகியோரும் சென்றனர். கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே சிக்னலில் சென்றபோது, சக்திவேல் முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்திச்செல்ல முற்பட்டார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து… பெண் உள்பட இருவர் பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்திற்குள்ளானது. இதில், மேகலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த சக்திவேல் மற்றும் லட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சக்திவேல் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணகிரி கொடுகூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் சம்பத் என்பவரை கைது செய்தனர்.