இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
Oct 29, 2020, 20:27 IST1603983467000
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் சலவை தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓசூரை அடுத்த காவேரிபட்டினத்தை சேர்ந்தவர் சலவை தொழிலாளர் ரங்கநாதன்(56), அவரது நண்பர் கோவிந்தராஜ்(53). இவர்கள் இருவரும் தர்மபுரியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனம் மூலம் ஓசூர் திரும்பியுள்ளனர். பாலக்கோடு அடுத்த கெரேகோடஅள்ளி என்ற இடத்தில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காரிமங்கலம் போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.