ஆம்பூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – இருவர் பலி!

 

ஆம்பூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – இருவர் பலி!

திருப்பத்தூர்

அம்பூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெங்களூரை சேர்ந்த 2 பாதிரியார்கள் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பாதிரியார்கள் விக்டர் மோகன், தாவீது ஆகியோர் நேற்று சென்னைக்கு சென்று விட்டு, காரில் பெங்களூரு திரும்பி கொண்டிருந்தனர். காரை சாம்சன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

நேற்றிரவு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள வெங்கிளி பகுதியில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பின் மீது மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது.

ஆம்பூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – இருவர் பலி!

இந்த விபத்தில், காரில் பயணித்த பாதிரியார்கள் விக்டர் மோகன், தாவீது ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒட்டுநர் சாம்சன் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த ஆம்பூர் போலீசார், சாம்சனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

மேலும், விக்டர் மோகன், தாவீது ஆகியோரது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.