சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

 

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி சாமியார்புதூர், கிழக்குத் தெருவைச் சேர்ந்த மணியின் மகன் நவீன். கடந்த மாதம் 11 ஆம் தேதி அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் மதன் மற்றும் அவனது நண்பர்கள் சரவணன் மற்றும் அபினேஷ் ஆகிய 3 பேரை பாலியல் ரீதியாக நவீன் துன்புறுத்தியுள்ளார்.

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நவீனை திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். அத்துடன் பாலியல் குற்றவாளி என்ற முறையில் குண்டர் தடுப்புக்காவலில் வைக்கக் கேட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா கந்தப்புனேனி பரிந்துரைத்துள்ளார். இதனை ஏற்று நவீனை குண்டர் தடுப்புக்காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டார் . இதை தொடர்ந்து நவீன் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

அதேபோல் சாமியார்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணியின் மகன் சங்கர் கடந்த மாதம் 3 ஆம் தேதி அதே பகுதியை சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து சத்திரப்பட்டி காவல் நிலைய போலீசார் குற்ற வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவரும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா கந்தப்புனேனி பரிந்துரைப்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.