“வெளியே ஆபீசு ,உள்ளே ஆபாசம்..” -நிறுவன போர்டில் நடந்த விபச்சார நிலையம்.

 

“வெளியே ஆபீசு ,உள்ளே ஆபாசம்..” -நிறுவன போர்டில் நடந்த விபச்சார நிலையம்.


ஒரு நிறுவன போர்வையில் ஒரு வீட்டிற்க்குள் பாலியல் தொழில் நடத்தியதன் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர் .


மகாராஷ்டிராவின் மீரா பயந்தர் நகரில் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள மீரா கவுட்டனில் உள்ள ஒரு நிறுவனம் வெளியே ஆபீஸ் போல தோற்றமளிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது .அந்த ஆபீஸ் வாசலில் போர்டும் வைக்கப்பட்டிருந்தது .ஆனால் அந்த ஆபீஸ் போர்வையில் உள்ளே பலான தொழில் நடப்பதாக போலீசுக்கு ரகசிய கிடைத்தது .
.அதன் பேரில் அந்த நிறுவனத்தின் மீது செவ்வாயன்று காஷிமிரா காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு சோதனை நடத்தியது.
அப்போது பொலிஸாரின் அதிரடி சோதனையில்அந்த நிறுவனத்தை பற்றி பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தது .அதன்படி அந்த ஆபீசிற்குள் பல பெண்களுக்கு தங்க இடமும் சாப்பிட உணவும் கொடுத்து தங்க வைக்கப்பட்டார்கள் .அதன் பிறகு அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள் .
போலீசாரின் அதிரடி ரெய்டில் அதன் மேலாளர் ஷங்கர் சிந்தமன் யாதவ் (37) மற்றும் பணியாளர் பாப்லு வைஜ்நாத் சவ் (25) ஆகியோரை கைது செய்துள்ளனர்.அதே நேரத்தில் அதன் உரிமையாளர் மக்வானாவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அங்கிருந்து இரண்டு பெண்களும் மீட்கப்பட்டனர் .
இந்த மூவருக்கும் எதிராக ஐபிசி மற்றும் ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (பிடா) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது.

“வெளியே ஆபீசு ,உள்ளே ஆபாசம்..” -நிறுவன போர்டில் நடந்த விபச்சார நிலையம்.