பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு பதிவு – திமுக நிர்வாகிகள் இருவர் கைது!

 

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு பதிவு – திமுக நிர்வாகிகள் இருவர் கைது!

கோவை

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவிட்டதாக, திமுகவை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவர் குறித்து பேஸ்புக் சமூக வலைதளத்தில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அவதூறு பரபப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சதீஷ் என்பவர், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு பதிவு – திமுக நிர்வாகிகள் இருவர் கைது!

விசாரணையில், கோவை தெற்கு மாவட்ட கலை, இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் மரப்பேட்டையை சேர்ந்த பட்டீஸ்வரன் மற்றும் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி தாஸ்பிரபு ஆகியோர் அவதூறான பதிவுகளை வெளியிட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்கள் இருவரையும் இன்று அதிகாலை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகிறன்றனர்.