காதலிக்க மறுத்த பெண் -காத்திருந்த வாலிபர் -அடுத்து வயலுக்கு சென்ற போது நடந்த விபரீதம்

 

காதலிக்க மறுத்த பெண் -காத்திருந்த வாலிபர் -அடுத்து வயலுக்கு சென்ற போது நடந்த விபரீதம்

வயலுக்கு சென்ற பெண்ணை ஒருவர் பலாத்காரம் செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் .

காதலிக்க மறுத்த பெண் -காத்திருந்த வாலிபர் -அடுத்து வயலுக்கு சென்ற போது நடந்த விபரீதம்


உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவின் அலிகார் ஹார்டுவகஞ்ச் பகுதியில் 18 வயதான பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்ற வாலிபர் விரட்டி விரட்டி காதலித்தார் .ஆனால் அந்த பெண் அவரை கண்டுகொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார் .அதனால் அந்த வாலிபர் அந்த பெண் எப்போது வீட்டைவிட்டு வெளியே வருவார் என்று காத்திருந்தார் .
கடந்த புதன்கிழமையன்று அந்த பெண் தன்னுடைய வீட்டு மாட்டுக்கு தீவனம் எடுப்பதற்காக அவரின் வயல்வெளிக்கு சென்றார் .அப்போது அந்த வாலிபர் கணேஷ் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றார் .அந்த நேரத்தில் தன்னை அவர் தொடர்ந்து வருவதையறியாத அந்த பெண் தனியே சென்றார் .பின்னர் அந்த பெண்ணை அந்த வயலில் வைத்து அவர் பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டார் .
அதன் பிறகு அந்த பெண் மெல்ல எழுந்து வீட்டிற்கு வந்தார் .வீட்டில் இந்த விஷயத்தை சொல்லி விட்டு மன உளைச்சலில் இருந்தார் .அவரின் குடும்பத்தினர் அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க போலீசை அணுக இருந்தனர் .அதற்குள் அந்த பெண் வியாழக்கிழமை வீட்டின் அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .பிறகு போலீசில் புகாரளிக்கப்பட்டது .போலீசார் அந்த வாலிபர் கணேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .