வேலூரில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி : பாதிப்பு எண்ணிக்கை 1, 530 ஆக உயர்வு!

 

வேலூரில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி : பாதிப்பு எண்ணிக்கை 1, 530 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,882 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94, 049 ஆக அதிகரித்துள்ளது.

வேலூரில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி : பாதிப்பு எண்ணிக்கை 1, 530 ஆக உயர்வு!

நேற்று மட்டும் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி : பாதிப்பு எண்ணிக்கை 1, 530 ஆக உயர்வு!

இந்நிலையில் வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்துவாச்சாரியை சேர்ந்த 73 வயது முதியவர், சங்கரன்பாளையத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஆகிய இருவர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை வேலூரில் 1530 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 410 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.