மீண்டும் கொரோனா ஹாட்ஸ்பாட்டாகும் கோயம்பேடு!

 

மீண்டும் கொரோனா ஹாட்ஸ்பாட்டாகும் கோயம்பேடு!

கோயம்பேடு மார்க்கெட்டில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால் அவர்கள் போலியான முகவரியை கொடுத்ததாகவும், அவர்களை கண்டுபிடித்து தரும்படியும் போலீசில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் செய்து உள்ளனர்.

கோயம்பேடு சந்தை கொரோனா காரணமாக கடந்த 5 மாத காலமாக மூடப்பட்டு கிடந்த நிலையில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி திறக்கப்பட்டது. நோய் தொற்று குறைந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளால், கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் முகவரிகள், செல்போன் நம்பர்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 11-ந் தேதி பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 2 பேருக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது உறுதியானது.

மீண்டும் கொரோனா ஹாட்ஸ்பாட்டாகும் கோயம்பேடு!

இதையடுத்து அவர்கள் அளித்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என வந்துள்ளது. முகவரியும் தவறாக இருப்பதால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் முழித்துவருகின்றனர். போலி முகவரி கொடுத்துவிட்டு தப்பிய கொரோனா நோயாளிகளைகண்டுபிடித்து தரும்படி கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.