முசிறி கல்லூரி மாணவர் கொலை வழக்கில், இருவர் கைது!

 

முசிறி கல்லூரி மாணவர் கொலை வழக்கில், இருவர் கைது!

திருச்சி

முசிறி காவிரி ஆற்றில் கல்லூரி மாணவர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில், அதே பகுதியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறி சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் கவுதம்(19). இவர் கடந்த 17ஆம் தேதி காவிரி ஆற்றில் அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக முசிறி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்த, கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், கவுதம் கொலையில் தொடர்புடைய சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த ரகுபதி(23) மற்றும் அங்களம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகுமணி ஆகியோர், நேற்று முசிறி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தன் முன்பு நேற்று சரணடைந்தனர்.

முசிறி கல்லூரி மாணவர் கொலை வழக்கில், இருவர் கைது!

இதனை அடுத்து, இருவரையும் போலீசார் கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், அழகுமணியின் உறவினர் மகளை, கவுதம் கேலி கிண்டல் செய்து வந்ததுள்ளார்.

அதனை பலமுறை கண்டித்தும் கவுதம் கேட்காததால் ஆத்திரமடைந்த அழகுமணி, நண்பரான ரகுபதியுடன் சேர்ந்து இரும்பு குழாயால் கவுதமை அடித்துக்கொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்