கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது!

 

கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது!

கடலூர் அருகே கீழ் அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவர் சுபாஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் 2 பேர் கைதாகியுள்ளனர்.

கீழ் அரங்குணம் ஊராட்சி மன்றத் தலைவர்  சுபாஷ்.  தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.  இவர்  அதே பகுதியில் இருக்கும் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது எதிரே வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது!

உள்ளாட்சித் தேர்தலில் சுபாஷ் வெற்றி பெற்றதால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது!

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கீழ் அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ் நேற்று வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் மேலும் 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.