வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த இருவர் கைது

 

வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த இருவர் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1,250 மதுபாட்டில்கள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்த கல்பாடி கிராமத்தில் சிலர் வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், கல்பாடி கிராமத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏழுமலை ஆகியோரது வீடுகளில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த இருவர் கைது

இதனை அடுத்து, இருவரது வீடுகளில் இருந்தும் சுமார் ஆயிரத்து 250 மதுபாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்வதற்காக பாண்டிச்சேரியில் இருந்து கார் மூலம் மதுபாட்டில்களை கடத்திவந்தது தெரியவந்தது. மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் ராஜீவ்காந்தி என்பவருக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து தலைமறைவாக உள்ள ராஜீவ்காந்தியை போலீசார் தேடி வருகின்றனர்.