காட்டு யானைக்கு தீ வைத்து கொளுத்திய கொடூரம் : இருவர் கைது!

 

காட்டு யானைக்கு தீ வைத்து கொளுத்திய கொடூரம் : இருவர் கைது!

காட்டுயானைக்கு தீ வைத்த 2 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன் இந்த கோர சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

காட்டு யானைக்கு தீ வைத்து கொளுத்திய கொடூரம் : இருவர் கைது!

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கடந்த சில நாட்களுக்கு காட்டுயானை ஒன்று காயங்களுடன் சுற்றி திரிந்தது. இதனால் வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி யானையை பிடித்து அதற்கு சிகிச்சை அளித்தனர்.ஆனாலும் யானை குணமாகவில்லை. இதையடுத்து வனத்துறையினர் யானையின் காது பக்கம் தீக்காயம் இருந்ததையும், சிறிய காது பகுதி துண்டாகி கீழே விழுந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்க, கடந்த 19- ம் தேதி லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே யானை உயிரிழந்தது. இதுகுறித்த விசாரணையில் வனத்துறையினர் இறங்கிய நிலையில் யானை குறித்த வீடியோ ஒன்று வெளியாகி கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காட்டு யானைக்கு தீ வைத்து கொளுத்திய கொடூரம் : இருவர் கைது!

அதாவது தனியார் ரிசார்ட் பகுதிக்கு வந்த காட்டு யானையை விரட்ட முயற்கை செய்த ஊழியர்கள், டயர்களை கொளுத்தி அதன் மீது வீசியுள்ளனர். இதில் யானைக்கு காயம் ஏற்பட்டு அலறி கொண்டு மீண்டும் காட்டுக்குள் ஓடியுள்ளது. இதன் காரணமாகவே யானை இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காட்டு யானைக்கு தீ வைத்து கொளுத்திய கொடூரம் : இருவர் கைது!

இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பிரசாத்(36) மற்றும் ரேமண்ட் டீன் (28) இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரிக்கி ராயனை வனத்துறையினர் தேடி வருகின்றனர். சம்மந்தப்பட்ட தனியார் ரிசார்ட்டுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.