திருப்பத்தூரில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

 

திருப்பத்தூரில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் செயின்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், நாடறம்பள்ளி, ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்துசெல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வரும் மர்மநபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறிதது வந்த தொடர் புகார்களின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

திருப்பத்தூரில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

இந்த நிலையில் நேற்றிரவு வாணியம்பாடி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துசென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் பெரியவெங்கட சமுத்திரம் பகுதியை சேர்ந்த சுதாகர்(20) மற்றும் பிரவீன்(19) என்பதும், இருவரும் சாலையில் நடந்துசெல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்து 11 சவரன் தங்க நகைகளையும், கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் கைதுசெய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.